மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் நானும் என் நண்பர்களும் ஏதேனும் ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வது வழக்கம். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி நானும் நண்பர் நாகராஜன் மற்றும் சாய்ராஜ் ஆகியோருடன் கல்வராயன் மலைக்குச் சென்றிருந்தோம். நல்ல ரம்மியமான சூழ்நிலை, சுத்தமான காற்று, வெகுளியான மக்கள், நல்ல வரவேற்பு. மாலையில் சற்றே காலாற நடந்தோம். விதவிதமான செடிகள், மரங்கள், பூக்கள், நீரோடைகள், இடையே சில பன்றிகளும் உண்டு. சுத்தமான காற்றை சுவாசிக்கும்போது மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை நன்றாக உணர முடிந்தது. அடுத்த நாள் திரு. ஏசுராஜன் அவர்களின் நண்பருடைய வாகனத்தில் நண்பர் குரு அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம். நல்ல சுவையான மதிய உணவு அளித்தார். (அன்புத்தொல்லை சற்றே அதிகமோ? ). ஓய்விற்குப்பிறகு கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment